ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன

Date:

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 1,000 இற்கும் மேற்பட்ட வாள்கள், வெடிகுண்டு துண்டுகள், ஈட்டி ஆயுதங்கள் ஆகியவை நீதிமன்ற உத்தரவுப்படி ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

கடற்படை அதிகாரிகளுடன் சுரனிமலை கடற்படை அதிகாரிகள், 1000 கடல் மைல் தொலைவிலும், 1000 அடி ஆழத்திலும் ஆழ்கடலில் இந்த ஆயுதக் குவியலை மூழ்கடித்து அழித்துள்ளனர்.

பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸீன் உத்தரவுக்கமைய, மேலதிக நீதவான் பசன் அமரசிங்க, நீதிமன்ற பதிவாளர், வழக்குகளின் பாதுகாவலர் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த ஆயுதத் தொகையை மூழ்கடித்து அழித்துள்ளனர்.

இதன் மூலம் 1000 வாள்கள், கத்திகள், நுனி ஆயுதங்கள், வெடிகுண்டு பாகங்கள், 08 துப்பாக்கிகள் மற்றும் 10 கல்கட்டாஸ் ரக துப்பாக்கிகள் அழிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...