ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன

Date:

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 1,000 இற்கும் மேற்பட்ட வாள்கள், வெடிகுண்டு துண்டுகள், ஈட்டி ஆயுதங்கள் ஆகியவை நீதிமன்ற உத்தரவுப்படி ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

கடற்படை அதிகாரிகளுடன் சுரனிமலை கடற்படை அதிகாரிகள், 1000 கடல் மைல் தொலைவிலும், 1000 அடி ஆழத்திலும் ஆழ்கடலில் இந்த ஆயுதக் குவியலை மூழ்கடித்து அழித்துள்ளனர்.

பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸீன் உத்தரவுக்கமைய, மேலதிக நீதவான் பசன் அமரசிங்க, நீதிமன்ற பதிவாளர், வழக்குகளின் பாதுகாவலர் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த ஆயுதத் தொகையை மூழ்கடித்து அழித்துள்ளனர்.

இதன் மூலம் 1000 வாள்கள், கத்திகள், நுனி ஆயுதங்கள், வெடிகுண்டு பாகங்கள், 08 துப்பாக்கிகள் மற்றும் 10 கல்கட்டாஸ் ரக துப்பாக்கிகள் அழிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...