ஊவா வெல்லஸ்ஸ கல்விச் செயற்பாடுகள் 21 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

Date:

தற்போது காலவரையறையின்றி மூடப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு அனைத்து பீடங்களின் கற்கை நடவடிக்கைகள் இம்மாதம் 21ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, மூன்றாம் ஆண்டு பல்கலைக்கழக விடுதிகளில் பயிலும் மாணவர்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் தங்களுடைய விடுதிகளுக்குத் திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தின் அனைத்து பீடங்களின் கற்கைகளும் இம்மாதம் 28ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.

இரண்டாம் ஆண்டு அனைத்து பீட மாணவர்களுக்கும் செப்டெம்பர் 2ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு படிப்பு விடுமுறை வழங்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...