கந்தானை இரசாயன தொழிற்சாலையில் தீ பரவல்: 85 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

Date:

கந்தானை இரசாயன தொழிற்சாலையில்  ஏற்பட்ட தீ விபத்தினால் வெளியேறிய புகை காரணமாக பாதிக்கப்பட்ட 85 மாணவிகள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தானை, தேவாலய வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

குறித்த தொழிற்சாலையானது கந்தானை புனித செபஸ்தியார் பெண்கள் கல்லூரிக்கு அருகாமையில்  அமைந்துள்ளதால் தீ விபத்தின் போது வெளியேறிய புகை காரணமாக  85 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 85 மாணவிகளும் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக  ராகம போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கினறன.

கந்தானை இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...