கிம்புலாவல தெருவோர உணவுக் கடைகளை அகற்றுமாறு அறிவிப்பு

Date:

இலங்கையின் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள கிம்புலாவல பகுதியில் உள்ள தெருவோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த உணவு விற்பனை நிலையங்களை 14 நாட்களுக்குள் அகற்றுமாறு விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் ஊடாக இயங்கும் வாகனங்களுக்கு இந்த தெருவோர உணவு விற்பனை நிலையங்கள் இடையூறாக உள்ளதுடன், அனுமதியின்றி இரண்டு மாடிக்கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இப்பிரதேசத்தில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

வீதி விபத்துக்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...