கொழும்பில் போராட்டம் நடத்துவதற்கு 24 நபர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

Date:

கொழும்பின் சில பகுதிகளுக்குள் இன்று நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 நபர்களுக்கு உள் நுழைவதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு வளாகம் மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் இந்த குழுவினர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளான துமிந்த நாகமுவ, முஜிபுர் ரஹ்மான், வாசுதேவ நாணயக்கார, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பேராசிரியர் சரித ஹேரத் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை குறித்த பகுதிகளுக்குள் நுழைய முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...