கொழும்பில் போராட்டம் நடத்துவதற்கு 24 நபர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

Date:

கொழும்பின் சில பகுதிகளுக்குள் இன்று நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 நபர்களுக்கு உள் நுழைவதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு வளாகம் மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் இந்த குழுவினர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளான துமிந்த நாகமுவ, முஜிபுர் ரஹ்மான், வாசுதேவ நாணயக்கார, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பேராசிரியர் சரித ஹேரத் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை குறித்த பகுதிகளுக்குள் நுழைய முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...