கொழும்பில் போராட்டம் நடத்துவதற்கு 24 நபர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

Date:

கொழும்பின் சில பகுதிகளுக்குள் இன்று நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 நபர்களுக்கு உள் நுழைவதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு வளாகம் மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் இந்த குழுவினர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளான துமிந்த நாகமுவ, முஜிபுர் ரஹ்மான், வாசுதேவ நாணயக்கார, ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பேராசிரியர் சரித ஹேரத் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை குறித்த பகுதிகளுக்குள் நுழைய முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...