தங்கள் கலாசாரத்திற்கு எதிராக இருப்பதாக குவைத் நாட்டில் பார்பி படத்திற்குத் தடை!

Date:

ஓரினச் சேர்க்கை முறையை ஊக்குவிப்பதாக கூறி குவைத் மற்றும் லெபனானில் தடை விதிப்புக்கு உள்ளாகி உள்ளது பார்பி திரைப்படம்.

கற்பனை கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து உலாவ விடுவதில் சளைக்காதவர்கள் ஹாலிவுட்காரர்கள். அந்த வகையில், குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பார்பி பொம்மைகளுக்கு உயிர் கொடுத்து பார்பி படத்தை உலாவ விட்டார் பெண் இயக்குநர் கிரெட்டா கெர்விக்.

ஃபேண்டஸி, காமெடியுடன் பெண்ணியம் பேசும் இந்த திரைப்படம், குழந்தைகளை தவிர்த்து பெரும்பாலான தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் அந்நியப்பட்டு இருந்தது. அந்த குறையையும் தீர்த்துள்ளது AI தொழில்நுட்பம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோரை பார்பி பாய்களாக உருமாற்றி உள்ள இந்த பேன்மேட் போஸ்டர்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

மற்றொரு புறம், பார்பி திரைப்படம் ஓரின சேர்க்கை முறை மற்றும் பாலின மாற்றங்களை ஊக்குவிப்பதாக கூறி குவைத்தில் தடை விதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், சமூக நெறிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகவும் கூறி, மீண்டும் சென்சர் செய்ய உத்தரவிட்டுள்ளது லெபனான் அரசு.

 

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...