பதிவு செய்யப்படாத NGOக்கள் பணிபுரிய அனுமதி இல்லை!

Date:

பதிவு செய்யப்படாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாட்டில் பணிபுரிய அனுமதி வழங்கப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்தில்கொண்டு காலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துவதற்கு காலி உதவி மாவட்ட செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

உதவி மாவட்ட செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டத்தில் பங்கேற்காத நிறுவனங்களின் பதிவுகளை இரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த அரச சார்பற்ற நிறுவனங்களின் தகவல்களை தேசிய செயலகத்திற்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காலி உதவி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சிக்கல் நிலைமைகள் காரணமாக பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டில் செயற்படுவதற்கு அனுமதி இல்லை என பாதுகாப்பு அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...