பியகம வர்த்தக வலய குப்பை மலை தீயினால் பிரதேச வாசிகளுக்குப் பாதிப்பு!

Date:

பியகம வர்த்தக வலயத்தினுள் காணப்படும் குப்பை மலை தீப்பற்றிக் கொண்டதால் அதனை சூழ உள்ள நாகஹவத்த, வேகத்த, வலகம பூந்தோட்டம் மற்றும் கந்தவத்த முதலான பகுதியிலூள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.

இரசாயனப்பொருட்கள், பிளாஸ்டிக், ரெஜிபோம், பொலித்தீன், துணி மற்றும் உலோகத்துண்டுகளும் இந்த குப்பை தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் சுவாசிக்க கஷ்டமான நிலை ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த குப்பை மலை தானாக தீப்பற்றியதாக வர்த்தக வலயத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டாலும் இங்கு குப்பை கூலங்களில் அகப்பட்டு உள்ள உலோகப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட காரியம் என பிரதேச மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது வருடா வருடம் திட்டமிட்டு கழிவு பொருட்கள் வாங்கும் வியாபாரிகளின் ஒத்துழைப்புடன் தீவைக்கப்பட்டதாகவும் பிரதேச வாசிகள் சிலர் எமது செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...