பெருந்தோட்டத்துறை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதம்!

Date:

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான அவ நம்பிக்கை பிரேரணையை இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் விவாதிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இதற்கான திகதியினை சபாநாயகரே தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை இந்த வாரத்தில் விவாதிப்பதற்கு அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பெருந்தோட்டத்துறை தொடர்பான விவாதம் இந்தவாரம் இடம்பெறவுள்ளதால் இதற்கே பிரதான முக்கியத்துவத்தை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட மருந்து தட்டுப்பாடு மற்றும் சர்ச்சைக்குரிய மயக்க மருந்து உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக அவ நம்பிக்கை பிரேரணையை முன்வைத்துள்ளது.

இதேவேளை பெருந்தோட்ட மக்கள் தொடர்பான அவர்களது அரசியல், பொருளாதார, சமூக, பின்னடைவுகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...