மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற ஊழியர்கள் மீது பலகையால் சரமாரி தாக்குதல்!

Date:

தலாவ ஜெயகங்கை பிரதேசத்தில் வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற இரு ஊழியர்களை  பலகையால் குறித்த வீட்டின் உரிமையாளரின் மகன் தாக்கியுள்ளார்.

இது தொடர்பிலான முறைப்பாடொன்றும் தற்போது தலாவ பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (21) கெக்கிராவ தலாவ ஜயகங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் இருவர் இந்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க வந்துள்ளனர்.

பின்னர்,  அன்றைய தினம் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்துவதாக  அந்த வீட்டின் உரிமையாளர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆனால், மின்சார அதிகார சபையிலிருந்து உரிய உத்தரவு வந்துள்ளதால், மின்வெட்டை கட்டாயம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதன்படி, குறித்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க முற்பட்ட போது, ​​அதனைக் கேட்காததால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளரின் மகன், அருகில் இருந்த நாய் கூரை மீது இருந்த பலகையால் மின்சாரத்தை துண்டிக்க முயன்ற நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும், அந்த சம்பவத்தின் போது எடுக்கபட்ட காணொளியும் தற்போது பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...