வங்கிகளுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள உத்தரவு!

Date:

உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அனைத்து வட்டி வீதங்களை ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் குறைக்க மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

அடமான வட்டி வீதங்கள், கடன் வட்டி வீதங்கள், கடனட்டை வட்டி வீதங்கள்போன்றவற்றின் வட்டி வீதங்களை குறைக்க இதன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான வட்டி வீதத்தை பேணுவது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1949 ஆம் ஆண்டின் பணச் சட்டம் எண் 58 இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின் ஊடாக வட்டி வீதங்கள் தொடர்பான வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சராசரி கடன் வட்டி வீதத்தை 13.5 சதவீதமாக பேணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடமான வட்டி விகிதம் 18 சதவீதமாகவும், கடனட்டை வட்டி விகிதம் 28 சதவீதமாகவும் பராமரிக்கப்படும் என்று உரிமம் பெற்ற வங்கிகளுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...