அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, கல்லோய சிறிதம்ம தேரர், ரத்னகராவே ஜனரதன தேரர் ஆகியோரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இவர்களுக்கு எதிராக நடைபெறும் வழக்கில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதால், இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் இருக்கும் வாகன தரிப்பிடத்திற்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.