வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக யால குளங்கள் பவுசர் தண்ணீரால் நிரப்பப்படுகின்றன!

Date:

தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை யால தேசிய பூங்காவையும் பாதித்துள்ளதால் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பௌசர்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு சிறிய குளங்களுக்கு பாய்ச்சப்பட்டு வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யால தேசிய பூங்கா ஊடாக பாயும் மெனிக் ஆற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டு பௌசர்கள் மூலம் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு தண்ணீர் தேவைப்படும் இடங்களுக்கு நிரப்பப் படுகிறது.

மேலும் பூங்காவில் உள்ள வறண்டு கிடக்கும் தொட்டிகளுக்கு சோலார் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் பம்ப் செய்யப்படுகிறது.

யால தேசிய பூங்காவிற்கு தற்போது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், எனவே சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளைப் பார்ப்பதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாளாந்த வருமானம் 80 இலட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...