வறட்சியான காலநிலையால் சிறுவர்களிடையே பல்வேறு நோய்கள் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Date:

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்களிடையே பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு – சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களிடையே நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறுவர்களுக்கு அதிகளவான திரவங்களை வழங்க வேண்டுமென வைத்தியர் பிரிந்துரைத்துள்ளார்.

மேலும், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் சிறுவர்களிடையே பரவக்கூடுமெனவும் சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...