வறட்சியான காலநிலையால் சிறுவர்களிடையே பல்வேறு நோய்கள் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Date:

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்களிடையே பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு – சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களிடையே நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறுவர்களுக்கு அதிகளவான திரவங்களை வழங்க வேண்டுமென வைத்தியர் பிரிந்துரைத்துள்ளார்.

மேலும், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் சிறுவர்களிடையே பரவக்கூடுமெனவும் சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...