வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு!

Date:

நாட்டில் நிலவும் வறட்சியான சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்துள்ளார்.

இந்த விடயத்தை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

“பயிர் சேதத்தை மதிப்பிடுவதற்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, எம்பிலிபிட்டிய விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைக்கென வெலி ஓயாவிலிருந்து குறிப்பிட்டத்தக்க அளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன்மூலம் அவர்களின் விவசாய நிலபரப்பில் 15 முதல் 20 வீதம் வரையான பயிர் நிலங்களுக்கு பாதுகாப்பை வழங்கமுடியும்” என எதிர்பார்க்கப்படுகின்றது.

நெற்பயிர்கள் கதிர் விடத் தொடங்கியுள்ள நிலையில் வயல்களுக்குத் தண்ணீர் வழங்கக் கோரி எம்பிலிப்பிட்டி விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...