ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 72ஆவது வருடப் பூர்த்தி கொழும்பில்…!

Date:

குருணாகல் – பண்டுவஸ்நுவரவில் அடுத்த மாதம் 2ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 72ஆவது வருடப் பூர்த்தியை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு நேற்று கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக குறித்த நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்பதில் நிதி நெருக்கடிகள் உள்ளன.

அத்தோடு இதுபோன்ற பாரியளவான நிகழ்வுகள் தற்போது நடத்துவது ஏற்புடையதல்ல என மைத்திரிபால சிறிசேன, மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள விருந்தகம் ஒன்றில்  குறித்த நிகழ்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...