ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 72ஆவது வருடப் பூர்த்தி கொழும்பில்…!

Date:

குருணாகல் – பண்டுவஸ்நுவரவில் அடுத்த மாதம் 2ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 72ஆவது வருடப் பூர்த்தியை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு நேற்று கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக குறித்த நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்பதில் நிதி நெருக்கடிகள் உள்ளன.

அத்தோடு இதுபோன்ற பாரியளவான நிகழ்வுகள் தற்போது நடத்துவது ஏற்புடையதல்ல என மைத்திரிபால சிறிசேன, மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள விருந்தகம் ஒன்றில்  குறித்த நிகழ்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...