ஹாதியா உயர்கல்வி நிறுவனத்துக்கு 41 பேர் தெரிவு! (பெயர் விபரம்)

Date:

குருநாகலை, குரீகொட்டுவையில் இயங்கி வரும் ஹாதியா உயர்கல்வி நிறுவனத்தின் நாலரை வருடக் கற்கை நெறிக்கு இம்முறை 41 பேர் தெரிவாகியுள்ளனர்.

ஜூலை 30 ஆம் திகதி நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து கலந்து கொண்ட விண்ணப்பதாரிகளில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

க.பொ.த.உயர்தரத்தில் கலைப்பிரிவுக்கான பாடநெறிகளையும் ஆலிமா கற்கை நெறியினையும் இந்தக் கல்வி நிறுவனம் ஒருங்கே வழங்கி வருகிறது.

இந்தக் கற்கை நெறியில் நான்கு மொழிகளில் தேர்ச்சி, தொழில் மற்றும் வாழ்க்கைக் கலைப் பயிற்சிகள், இஸ்லாமியக் குடும்ப வழிகாட்டல், ஆன்மீக மற்றும் பண்பாட்டுப் பயிற்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஹாதியா உயர்கல்வி நிறுவனத்தில் கற்று உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவிகளில் கணிசமான எண்ணிக்கையினர் வருடா வருடம் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதோடு தேசிய கல்விக் கல்லூரிகளுக்கும் தெரிவாகி வருகின்றனர்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாடநெறிகள் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...