இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவனம் (Institute of Engineers, Sri Lanka -IESL)
“Junior Inventor of the Year 2023” எனும் தலைப்பில் நடாத்திய.
இந்த போட்டியானது மாகாண ரீதியில் அண்மையில் நடைபெற்றது.
அதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியில் இறுதிச் சுற்று அண்மையில் Institution of Engineers, Srilanka தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில், கல்முனை ஸாஹிறா கல்லூரியில் கல்வி கற்கும் முஹம்மட் அதீப் உயர்தர கணித பிரிவு மாணவன், பாடசாலைப் பிரிவில் (School Category) பங்குபற்றி இறுதி சுற்று வரை சென்று சாதனையை நிலைநாட்டி உள்ளார்.
இம் மாணவனுக்கு பாடசாலை சார்பாகவும் பாடசாலை இளம் கண்டுபிடிப்பாளர் கழகம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.
இதுபோன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்கமளிப்பதன் மூலமாக எமது நாடு முன்னேற்றம் அடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
(தகவல் :- புத்தாக்குனர் கழகம் ஸாஹிரா தேசியக் கல்லூரி கல்முனை )