அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 10 பேருக்கு தடை!

Date:

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசான் சந்ரஜித் உள்ளிட்ட 10 பேருக்கு கொழும்பு கோட்டை பகுதியின் பல இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என பொலிஸாரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு, காலிமுகத்திடல், மற்றும் அலரி மாளிகை உள்ளிட்ட , இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த முடியும் என கோட்டை நீதவான் திலின கமகே தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறும் போராட்டக்காரர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...