அமைச்சரவை அமைச்சர்களின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை: பிரதி சபாநாயகர் குற்றச்சாட்டு!

Date:

உடவலவ நீர்தேக்கப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதில் ஒருசில அமைச்சரவை அமைச்சர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குற்றச்சாட்டு முன்வைத்துள்ளாா்.

இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  உடவலவ நீர்தேக்கத்தில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனா். இந்த நீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் ஒத்துழைப்பு மிகவும் கீழ்மட்டத்திலேயே இருக்கிறது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் இவர்கள் செயற்படுவது இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, இதனை தொடர்ந்து காலந்தாழ்த்தாமல் உடனடியாக கலந்துரையாடலை நடத்தி பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மக்களின் அத்தியவசிய தேவையை பற்றி சிந்தித்து செயற்பட அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. ஒருசில தீர்மானங்களினால் வீழ்ச்சி ஏற்படுமாக இருந்தால் அதற்கான நிவாரணத்தை எவ்வாறு பெற்றுக்கொடுக்க போகிறார்கள் என்பது புரியவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...

தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து...