இலங்கையில் முதன்முறையாக பூமிக்கு அடியில் அமைந்த உணவகம் !

Date:

இலங்கையில் முதன்முறையாக பூமிக்கு அடியில் 124 மீற்றர் (410 அடி ஆழத்தில் அமைந்த போகல கிராபைட் சுரங்க உணவகம் பார்வையாளர்களுக்கு பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுவதாக போகல கிராபைட் சுரங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க தெரிவித்தார்.

1865 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட போகலா கிராபைட் சுரங்கமானது உயர்தர கிராஃபைட் ஏற்றுமதி மூலம் உலகில் உயர்ந்த நற்பெயரைப் பெற்றுள்ளது.

ஜேர்மனி, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கிராஃபைட்டை ஏற்றுமதி செய்து இந்நாட்டுக்கு அதிக அளவில் அன்னியச் செலாவணியை ஈட்டித் தரும் தனித்துவமான தொழிற்சாலையாக இது காணப்படுகிறது.

போகல கிராஃபைட் சுரங்கத்தின் தற்போதைய ஆழம் 476 மீட்டர். 1585 அடி. இங்கு 124 மீட்டர் (410 அடி) ஆழத்தில் நிலத்தடி அமைக்கப்பட்டுள்ளது . இது இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது நிலத்தடி உணவகம் என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க தெரிவித்தார்.

இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் பதினைந்து பேர் அமர்ந்து அங்கு செய்யப்படும் உணவு மற்றும் பானங்களை உண்ண முடியும்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...