இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

Date:

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வார இறுதியில் இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ‘த ஹிந்து’ இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

‘Shi Yan 6’ எனும் சீன கடல்சார் ஆய்வு கப்பலுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் அமைவதாக ‘த ஹிந்து’ தெரிவித்துள்ளது.

இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர், திருகோணமலையில் அமைக்கப்படும் எண்ணெய் தாங்கிகளின் மேம்பாட்டு பணிகளை பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் கைச்சாத்திடப்பட்டது. சீன ஆய்வு கப்பலான Shi Yan 6 இலங்கை வருவதற்கு முன்னதாகவே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...