‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு பாரிய பிரச்சினை’

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமை நாட்டின் ஜனநாயகத்தை பாதிக்கும் பாரிய பிரச்சினை என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

தற்போது காலவரையறையின்றி இழுத்தடிக்கப்பட்டு வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமைக்கு பதிலளிக்கும் வகையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் குறைந்தபட்சம் ஒரு தேர்தலையாவது நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தல்களில் ஏதேனும் ஒன்றையாவது உலக ஜனநாயக தினமான செப்டம்பர் 15க்கு முன்னதாக நடத்தலாம் என்றும் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளிட்டிருந்தார்.

மேலும், மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் ஆணை எதுவுமின்றி, ஆளுநர்கள், செயலாளர்கள் மற்றும் ஆணையர்களால் நாட்டை ஆளுவது சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததையும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நினைவுபடுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...

தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து...