‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு பாரிய பிரச்சினை’

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமை நாட்டின் ஜனநாயகத்தை பாதிக்கும் பாரிய பிரச்சினை என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

தற்போது காலவரையறையின்றி இழுத்தடிக்கப்பட்டு வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமைக்கு பதிலளிக்கும் வகையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் குறைந்தபட்சம் ஒரு தேர்தலையாவது நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தல்களில் ஏதேனும் ஒன்றையாவது உலக ஜனநாயக தினமான செப்டம்பர் 15க்கு முன்னதாக நடத்தலாம் என்றும் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளிட்டிருந்தார்.

மேலும், மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் ஆணை எதுவுமின்றி, ஆளுநர்கள், செயலாளர்கள் மற்றும் ஆணையர்களால் நாட்டை ஆளுவது சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததையும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நினைவுபடுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...