எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பாக தடயவியல் தணிக்கை நடத்தப்படும்

Date:

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜேசேகர, பிரதி விலைப்பட்டியல் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

“கேபிஎம்ஜி லிமிடெட், உள்ளூர் நிபுணர் நிறுவனம் தடயவியல் தணிக்கையை நடத்தும்,” என அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த வருடம் இறக்குமதி செய்யும் போது குறிப்பிட்ட அளவு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் காணாமல் போனதாக பாராளுமன்ற உறுப்பினர் அமரசேன தெரிவித்தார்.

“500 பெளசர்களில் இருந்த எரிபொருள் சேமிப்பிடம் இல்லாத இடத்தில் இறக்கப்பட்டது. ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிபிசியின் மூன்று அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்,” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், தடயவியல் தணிக்கை மூலம் சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளிப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...