கந்தானை இரசாயன தொழிற்சாலையில் தீ பரவல்: 85 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

Date:

கந்தானை இரசாயன தொழிற்சாலையில்  ஏற்பட்ட தீ விபத்தினால் வெளியேறிய புகை காரணமாக பாதிக்கப்பட்ட 85 மாணவிகள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தானை, தேவாலய வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

குறித்த தொழிற்சாலையானது கந்தானை புனித செபஸ்தியார் பெண்கள் கல்லூரிக்கு அருகாமையில்  அமைந்துள்ளதால் தீ விபத்தின் போது வெளியேறிய புகை காரணமாக  85 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 85 மாணவிகளும் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக  ராகம போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கினறன.

கந்தானை இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...