காலி சிறைக் கைதிகளிடையே பரவிய பக்டீரியா கொழும்பில் பரவும் அபாயம்!

Date:

காலி சிறைசாலையில் கைதிகளிடையே பரவிய Meningococcal பக்டீரியா பாதிப்புக்குள்ளான நபரொருவர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜா-ஏல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தொற்றுக்குளானமை கண்டறியப்பட்டுள்ளது.

இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்றில் அவர் பணிபுரிவதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் சுகவீனம் காரணமாக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நபர் பணியாற்றி வந்த இடத்திலுள்ள சுமார் 30 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், நோயெதிர்ப்பு சக்தி மருந்துகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, Meningococcal பக்டீரியா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரையும் அடையாளம் காண்பது மிகவும் அவசியமாகும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பக்டீரியா பரவுவதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பது குறித்தும் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.

குறித்த நோய் தாக்கம் காரணமாக இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.

அத்துடன், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதுடன், சிறைச்சாலையில் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.

ஆரம்பத்தில் நோய்த் தொற்றுக்கான காரணம் கண்டறியப்படாத போதும் பின்னர் Meningococcal பக்டீரியா தொற்றினால் இந்த நிலைமை ஏற்பட்டதாக சுகாதார துறையினால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், Meningococcal பக்டீரியா தொற்றுக்கள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என பொதுமக்களுக்கு தொற்றுநோயியல் பிரிவு வேண்டுகோள் விடுத்திருந்தது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...