கிம்புலாவல தெருவோர உணவுக் கடைகளை அகற்றுமாறு அறிவிப்பு

Date:

இலங்கையின் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள கிம்புலாவல பகுதியில் உள்ள தெருவோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த உணவு விற்பனை நிலையங்களை 14 நாட்களுக்குள் அகற்றுமாறு விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் ஊடாக இயங்கும் வாகனங்களுக்கு இந்த தெருவோர உணவு விற்பனை நிலையங்கள் இடையூறாக உள்ளதுடன், அனுமதியின்றி இரண்டு மாடிக்கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இப்பிரதேசத்தில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

வீதி விபத்துக்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...