அவருக்கு அவர்களது தாய் அஸமா தான் சிறுநீரகம் தானம் கொடுத்துள்ளார். இதனால் சகோதரிகளின் தாய் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சகோதரிகள் 3 பேரும், அவர்களது தந்தையுடன் பீமநாடு பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றனர்.
அப்போது சகோதரிகளில் ஒருவர் குளத்தில் தவறி விழுந்து தத்தளித்தார். இதனை பார்த்த மற்ற சகோதரிகள் அவரை காப்பாற்ற அடுத்ததடுத்து குளத்துக்குள் இறங்கினர். அவர்களும் குளத்துக்குள் தவறி விழுந்து தத்தளித்தார்கள்.
சகோதரிகள் 3 பேரும் அடுத்தடுத்து குளத்தில் மூழ்கினர். இதனை கரையில் இருந்த அவர்களது தந்தை பார்த்து கூச்சலிட்டார்.
அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் குளத்தில் மூழ்கிய 3 சகோதரிகளையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
சுயநினைவின்றி கிடந்த அவர்கள், அங்கிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வைத்தியசாலைக்கு செல்வதற்குள் 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர். தந்தை கண் முன்னே 3 சகோதரிகளும் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.