திருகோணமலை விமான விபத்து: 1958இல் தயாரிக்கப்பட்ட பழைய விமானங்களை பயன்படுத்தும் இலங்கை!

Date:

இலங்கையில் PT-6 ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 06 விமானிகள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 1958ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானங்களை தொடர்ந்தும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“இலங்கையில் பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் PT-6 விமானங்கள் 1958 இல் தயாரிக்கப்பட்டவையாகும். அவற்றின் இயந்திரங்கள் 1961இல் தயாரிக்கப்பட்டவை. சீனாவில் இருந்தே இந்த விமானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த விமானங்கள் தயாரிக்கப்பட்ட தருணத்தில் நாம் பிறந்திருக்கவும் இல்லை. இந்த பழைய விமானங்களை பயிற்சிக்காக பயன்படுத்துவது நியாயமற்றது மற்றும் வருந்தத்தக்கது. அவற்றை பயிற்சிக்காக பயன்படுத்தாமல் அருங்காட்சியகங்களிலேயே வைக்க வேண்டும்.

விபத்துகள் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதில்லை. இவற்றுக்கு பொறுப்புக்கூற வேண்டியது யார்? அரசாங்கம் இதுதொடர்பில் உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்.தொடர்ந்து இவற்றை பயன்படுத்தி எமது விமானிகளை பலிகொடுக்க முடியாது” என்றார்.

விமானப் படைக்குச் சொந்தமான PT-6 ரக பயிற்சி விமானம் ஒன்று திருகோணமலை விமானப் படைத் தளத்தின் சீன குடா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நேற்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு விமானப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...