நாடளாவிய ரீதியில் முழு நேர நீர் விநியோகத்தில் சிக்கல்!

Date:

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரை வழங்குவது சவாலாக மாறியுள்ளது.

நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 344 நீர் விநியோக நடவடிக்கைகளில் 20 முழு நேர நீர் விநியோக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு நேர அட்டவனை (Shift) அடிப்படையில் நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி,குருநாகல், ஹெட்டிபொல, நிக்கவெரடிய, வாரியபொல, மாத்தறை – ஊருபொக்க ஹம்பாந்தோட்டை – பெலிஅத்த, முருத்தவெல, தங்கல்ல, வலஸ்முல்ல, அக்கறைப்பற்று, பொத்துவில், திருக்கோயில், மொனராகலை, பிபிலை, அம்புகஸ்துவ, பண்டாரவளை, ஹல்தும்முல்ல, போகஹாகும்புர, கந்தேகெடிய, சீலதெடிய, அமுனுகெலே, கெப்பெட்டிபொல ஆகிய பகுதிகளில் நீர் வழங்கல் அமைப்புகளில் கண்காணிப்பு முறையின் கீழ் கட்டுப்பாடுகளுடன் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினையால் இதுவரை நாட்டில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ், கட்டுப்பாட்டில் உள்ள 73 மஹாவரி வர்த்தக நிறுவனங்களில் 42 நிறுவனங்களின் செயற்றிறன் நீர் கொள்ளளவு 30% வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பாவிக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களுக்கு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...