நாட்டை விட்டுச் செல்லும் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள்!

Date:

கடந்த ஒரு வருடத்துக்குள் சுமார் 850 சாதாரண வைத்தியர்கள் சுகாதாரத் துறையில் இருந்து விலகியுள்ளமையை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதியிலிருந்து, இந்த ஆண்டு மே மாதம் 31ம் திகதி வரையான காலப்பகுதியில், குறித்த வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், குறித்த காலப்பகுதியில், 274 விசேட வைத்திய நிபுணர்களும் நாட்டை விட்டு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மருத்துவ கலாநிதி பட்டப்படிப்புகளை நிறைவுசெய்த 785 வைத்தியர்கள் எதிர்வரும் மாதங்களில் பயிற்சிகளுக்காக நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமக்கான பயிற்சிகளை நிறைவுசெய்ததன் பின்னர் அவர்கள் மீண்டும் நாட்டை வந்தடைவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வெளிநாடுகளில் 822 வைத்தியர்கள் பயிற்சிகளை பெற்றுவரும் நிலையில் அவர்களில் 632 பேர் மருத்துவ கலாநிதி பட்டப்படிப்புக்கான பரீட்சைகளுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...