நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

Date:

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், நீரின் தேவை அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், வரையறுக்கப்பட்ட நீரை நிர்வகிக்க வேண்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர் மின் உற்பத்திக்கு நீரை திறந்து விடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பயிர்களைப் பாதுகாக்க நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இலங்கையில் போதிய மழையைப் பெறவில்லை.

ஆண்டுதோறும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழை பதிவாகும்.

மேலும், வறட்சி காரணமாக உடவலவ நீர்த்தேக்கம் உட்பட பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...