பங்களாதேஷிடம் பெற்ற கடனில் ஒரு பகுதியை திருப்பி செலுத்தியது இலங்கை!

Date:

இலங்கை, பொருளாதார நெருக்கடியுடன் போராடிக்கொண்டிருந்த போதிலும், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று பொறிமுறையின் கீழ் பெற்ற 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் டொலர்களை பங்களாதேஷிற்கு நேற்று செலுத்தியதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகளால் முதல் தவணை செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்திய பங்களாதேஷ் வங்கியின் (BB) செய்தித் தொடர்பாளர் Md Mezbaul Haque, கடந்த வாரம் ஒகஸ்ட் 17 ஆம் திகதி தவணை பெறப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த தொகை நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த மாதத்திற்குள் இரண்டாவது தவணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என மத்திய வங்கியின் நிர்வாக பணிப்பாளர் ஹக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2021 செப்டெம்பரில் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருந்த தெற்காசியப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு பங்களாதேஷ் தனது வெளிநாட்டு இருப்பில் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனை இலங்கைக்கு வழங்கியது.

 

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...