பதிவு செய்யப்படாத NGOக்கள் பணிபுரிய அனுமதி இல்லை!

Date:

பதிவு செய்யப்படாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாட்டில் பணிபுரிய அனுமதி வழங்கப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்தில்கொண்டு காலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துவதற்கு காலி உதவி மாவட்ட செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

உதவி மாவட்ட செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டத்தில் பங்கேற்காத நிறுவனங்களின் பதிவுகளை இரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த அரச சார்பற்ற நிறுவனங்களின் தகவல்களை தேசிய செயலகத்திற்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காலி உதவி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சிக்கல் நிலைமைகள் காரணமாக பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டில் செயற்படுவதற்கு அனுமதி இல்லை என பாதுகாப்பு அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...