பாகிஸ்தான் இஸ்லாமிய அழைப்பாளர் டொக்டர் அம்ஜத் அஹ்ஸன் அலி மறைவு: உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி அனுதாபம்!

Date:

பாகிஸ்தானின் பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் டொக்டர் அம்ஜத் அஹ்ஸன் அலியின் மரணத்தையிட்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்.ரிஸ்வி முப்தி அனுதாபம் வெளியிட்டுள்ளார்.

ஒரு பெரும் ஆலிமுடைய வபாத் தொடர்பான கவலையான செய்தி இன்று எம்மை வந்தடைந்திருக்கிறது. வைத்தியத் துறையில் பட்டம் பெற்ற டொக்டர் அம்ஜத் அஹ்ஸன் அலி, பிற்காலத்தில் தனது தாயினுடைய வஸீயத்துக்காக பல உலமாக்களிடம் ஷரீஆக் கல்வியைக் கற்றுத் தேர்ந்தார்.

அரபு மொழியைக் கற்பிப்பதற்காக ஆயிஸா ஸித்தீககா என்றும் இப்னு அப்பாஸ் என்றும் இரண்டு நிறுவனங்களை அவர் உருவாக்கினார்.

அல்குர்ஆனை மனனமிடுவது போல ஸஹீஹ் புஹாரி போன்ற கிரந்தங்களையும் மனனமிடுகின்ற இந்தக் கல்வி நிறுவனங்களில் இலங்கையிலிருந்தும் பல சகோதரிகள் கற்றிருக்கின்றார்கள்.

டொக்டர் அம்ஜத் அவர்கள் இலங்கைக்கும் விஜயம் செய்த போதும் நாம் பாகிஸ்தானில் நாங்கள் அவருடைய கல்வி நிறுவனங்களுக்குச் சென்றபோதும் அவரிடமிருந்து நிறைய அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்தன.

அல்லாஹுத்தஆலா அவரது பணிகளைப் பொருந்திக் கொள்வானாக என அஷ். ரிஸ்வி முப்தி தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சௌத்ரி முஹம்மத் அலியின் மகனான இவர் பாகிஸ்தானின் ஹிஜாமா சிகிச்சை முறையின் முன்னோடியாவார்.

பாகிஸ்தான் லியாகத் தேசிய வைத்தியசாலையின் மருத்துவத் துறைப் பீடாதிபதியாகவும் கடமையாற்றியுள்ள இவர் கைதேர்ந்த இருதய சத்திர சிகிச்சை நிபுணருமாவார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...