பாராளுமன்றத்தில் பெண் பராமரிப்பு பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்!

Date:

பாராளுமன்றத்தின் பராமரிப்பு திணைக்களத்தில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பராமரிப்புத் துறையில் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தமக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி, குறித்த பெண்களிடம் எந்தவொரு பாலியல் துன்புறுத்தலும் நடக்கவில்லை என்று கடிதங்கள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் மேற்பார்வையில் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினால் விசாரணை நடத்தப்படும் என ரோகினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணைக் குழு 7ஆம் திகதி முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...