பியகம வர்த்தக வலய குப்பை மலை தீயினால் பிரதேச வாசிகளுக்குப் பாதிப்பு!

Date:

பியகம வர்த்தக வலயத்தினுள் காணப்படும் குப்பை மலை தீப்பற்றிக் கொண்டதால் அதனை சூழ உள்ள நாகஹவத்த, வேகத்த, வலகம பூந்தோட்டம் மற்றும் கந்தவத்த முதலான பகுதியிலூள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.

இரசாயனப்பொருட்கள், பிளாஸ்டிக், ரெஜிபோம், பொலித்தீன், துணி மற்றும் உலோகத்துண்டுகளும் இந்த குப்பை தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் சுவாசிக்க கஷ்டமான நிலை ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த குப்பை மலை தானாக தீப்பற்றியதாக வர்த்தக வலயத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டாலும் இங்கு குப்பை கூலங்களில் அகப்பட்டு உள்ள உலோகப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட காரியம் என பிரதேச மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது வருடா வருடம் திட்டமிட்டு கழிவு பொருட்கள் வாங்கும் வியாபாரிகளின் ஒத்துழைப்புடன் தீவைக்கப்பட்டதாகவும் பிரதேச வாசிகள் சிலர் எமது செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...