பியகம வர்த்தக வலய குப்பை மலை தீயினால் பிரதேச வாசிகளுக்குப் பாதிப்பு!

Date:

பியகம வர்த்தக வலயத்தினுள் காணப்படும் குப்பை மலை தீப்பற்றிக் கொண்டதால் அதனை சூழ உள்ள நாகஹவத்த, வேகத்த, வலகம பூந்தோட்டம் மற்றும் கந்தவத்த முதலான பகுதியிலூள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.

இரசாயனப்பொருட்கள், பிளாஸ்டிக், ரெஜிபோம், பொலித்தீன், துணி மற்றும் உலோகத்துண்டுகளும் இந்த குப்பை தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் சுவாசிக்க கஷ்டமான நிலை ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த குப்பை மலை தானாக தீப்பற்றியதாக வர்த்தக வலயத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டாலும் இங்கு குப்பை கூலங்களில் அகப்பட்டு உள்ள உலோகப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட காரியம் என பிரதேச மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது வருடா வருடம் திட்டமிட்டு கழிவு பொருட்கள் வாங்கும் வியாபாரிகளின் ஒத்துழைப்புடன் தீவைக்கப்பட்டதாகவும் பிரதேச வாசிகள் சிலர் எமது செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...