புகையிரத தொழிற்சங்க நடவடிக்கையால் பயணிகள் பாதிப்பு

Date:

புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் நேற்று (22) இரவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட திடீர் தொழிற்சங்க நடவடிக்கையினால், பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கு தாக்கிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை புகையிரத பிரிவில் நேற்று இரவு 7 மணியளவில் புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் மீது அதே பிரிவில் சேவை செய்யும் இன்னுமொரு ஊழியர் ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமையை, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் சேவைகளிலிருந்து நீங்குவதற்க்கு அந்த சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக இரவு நேர தபால் புகையயிரதம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

எவ்வாறாயினும் இரவு 9 மணியளவில் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...