புதிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய சீனா!

Date:

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலை வகிக்கும் வகையில் சீனாவின் சமீபத்திய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

சீனா தனக்கென்று புதிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவது, நிலவுக்கு மனிதனை அனுப்புவது என புரட்சிகர திட்டங்களை வகுத்து செயல்படுகிறது.

மேலும் தனது ரொக்கெட்டுகளை கொண்டு செயற்கைக்கோள்கள் ஏவி விண்ணகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றது.

அந்த வகையில் காலநிலை கண்காணிப்பு, அனர்த்த மேலாண்மை குறித்து மேம்பட்ட தகவல்களை பெறும் வகையில் சீன நிறுவனம் புதிய செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது.

ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-4சி என்னும் ரொக்கெட் கோபேன்-12 04 என்ற செயற்கைக்கோளை சுமந்தப்படி விண்ணில் செலுத்தப்பட்டது.

பின்னர் திட்டமிட்டபடி அதன் சுற்று வட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.

நில அளவீடு, நகர்புற வளர்ச்சியை தீர்மானம், விளைபொருட்கள் மதிப்பீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...