மட்டக்குளியில் பதற்றம் : ஒருவர் படுகொலை!

Date:

மட்டக்குளி – பர்கியூசன் வீதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சில குழுக்களுக்கு இடையில் கடந்த இரு வாரங்களாக முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை குறித்த தோட்டத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் இனவாத ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்..

இதேவேளை குறித்த மோதலில் மேலும் சில இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இது தொடர்பில் மட்டக்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுசென்றதாகவும், குறித்த பகுதிக்கு முழுமையான பாதுகாப்பை வழங்க அவர் ஏற்பாடு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...