மனிதாபிமானச் செயற்பாடுகளுக்கான உலகளாவிய முஸ்லிம் எய்ட் மாநாட்டை இலங்கையில் வெற்றிகரமாக நடத்தியது ஸ்ரீலங்கா முஸ்லிம் எய்ட்!

Date:

ஐக்கிய ராஜ்ஜியத்தைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமானச் செயற்பாடுகளை சுய திறன் மதிப்பீடு செய்வதற்கான உலகளாவிய மாநாடு நேற்று முன்தினம் கொழும்பில் ஆரம்பமாகியது.

முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சர்வதேச நிகழ்வில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதானிகள் உட்பட முஸ்லிம் எய்டின் மியன்மார், பாகிஸ்தான், பங்களாதேஷ், சூடான், சோமாலியா நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் எய்டின் இலங்கைக்கான பணிப்பாளரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க,

இலங்கையின் அபிவிருத்திக்காக முஸ்லிம் எய்ட் வழங்கி வரும் மனிதாபிமானப் பணிகளைப் பாராட்டியதோடு சரியான தருணத்தில் இந்த மாநாடு நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலைகள் மற்றும் அனர்த்தங்களைக் குறைப்பது தொடர்பில் நிறுவனங்கள் இணைந்து செயற்பட முடியுமான பகுதிகளை எடுத்துக் காட்டினார்.

ஒவ்வொரு நாட்டினதும் தேவைக்கேற்ற வகையில் பிராந்திய நாடுகள் தமது அனுபவங்களையும் பாடங்களையும் சிறந்த செயன்முறைகளையும் பகிர்ந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகம் சஞ்ஜீவ விமலகுணரத்ன உரையாற்றும் போது முஸ்லிம் எய்டைப் பாராட்டியதோடு நாட்டில் உதவி தேவைப்படும் மக்களுக்காக அது தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் ஆரம்பக் கல்வி முறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றிக் குறிப்பிட்ட அவர் முஸ்லிம் எய்ட் போன்ற நிறுவனங்கள் இதில் பங்களிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடனும் வகைகூறும் வகையிலும் செயற்படும் வகையில் இந்நிறுவனங்களுடன் செயலகம் நெருங்கிச் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசிய முஸ்லிம் எய்டின் நல்லெண்ணத் தூதுவரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளருமான அஷ்.அர்கம் நூரமித், பல்வேறு மதத்தினரையும் இணைக்கும் வகையில் முஸ்லிம் எய்டின் மனிதாபிமான சமூக அபிவிருத்திச் செயற்பாடுகள் நடைபெறும் விதத்தை விளக்கிப் பேசினார்.

முஸ்லிம் எய்டின் 33 ஆண்டுகால வரலாற்றையும் உலகளாவிய மனிதாபிமான மேம்பாட்டுக்கான அதன் வகிபாகத்தையும் விளக்கிய முஸ்லிம் எய்டின் உலகளாவிய நிகழ்ச்சித் திட்டங்களின் முகாமையாளர் சாம் குக் முஸ்லிம் எய்டின் செயற்திட்டங்களின் விரிவாக்கம் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

அனர்த்த முகாமைத்துவத்துக்கான ஆசிய பசிபிக் கூட்டமைப்பின் இலங்கைப் பணிப்பாளர் பிர்ஸான் ஹாஷிம், முஸ்லிம் எய்ட் யூகேயின் மனிதாபிமானத் திட்டங்களின் முகாமையாளர் ஆசிப் ஷஹாப் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...