மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற ஊழியர்கள் மீது பலகையால் சரமாரி தாக்குதல்!

Date:

தலாவ ஜெயகங்கை பிரதேசத்தில் வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற இரு ஊழியர்களை  பலகையால் குறித்த வீட்டின் உரிமையாளரின் மகன் தாக்கியுள்ளார்.

இது தொடர்பிலான முறைப்பாடொன்றும் தற்போது தலாவ பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (21) கெக்கிராவ தலாவ ஜயகங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் இருவர் இந்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க வந்துள்ளனர்.

பின்னர்,  அன்றைய தினம் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்துவதாக  அந்த வீட்டின் உரிமையாளர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆனால், மின்சார அதிகார சபையிலிருந்து உரிய உத்தரவு வந்துள்ளதால், மின்வெட்டை கட்டாயம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதன்படி, குறித்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க முற்பட்ட போது, ​​அதனைக் கேட்காததால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளரின் மகன், அருகில் இருந்த நாய் கூரை மீது இருந்த பலகையால் மின்சாரத்தை துண்டிக்க முயன்ற நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும், அந்த சம்பவத்தின் போது எடுக்கபட்ட காணொளியும் தற்போது பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...