மின்சார கட்டணத்துக்காக மாணவர்களிடமிருந்து பணம் அறவிட முடியாது: ஜோசப் ஸ்டாலின்

Date:

வட மாகாணத்தில் முன்னணி பாடசாலைகளில் மின்சார கட்டணம் மற்றும் ஏனைய பாடசாலை செலவுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிட முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

பாடசாலைகள் மாணவர்களிடம் நிதியை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில் பெற்றோர்கள் பணம் வழங்க வேண்டாம். மின்சார கட்டணத்தை உயர்த்திய அரசாங்கம் பாடசாலைகளுக்கான மின்சார கொடுப்பனவுகளையும் அதிகரித்தே ஆக வேண்டும்.

இதற்கமைய பாடசாலைகள் மாணவர்களிடம் பணம் கேட்டால் பெற்றோர்கள் வழங்க வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு நிர்பந்திக்கப்பட்டால் எமக்கு முறைப்பாடு தாருங்கள் நாம் அதற்கு கடுமையான நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

வடக்கில் உள்ள பிரபல பாடசாலைகள் சில பாடசாலை மின்சார கட்டணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை ஈடு செய்வதற்காக மாணவர்களிடம் பணம் அறவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...