முஸ்லிம்களின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் மன்னிப்பு கோர மறுக்கும் கெஹலிய!

Date:

கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை தகனம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மன்னிப்பு கேட்க சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பகிரங்க மன்னிப்புக் கோருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்னர் அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆராய குழுவொன்றை நியமிக்க வேண்டும் என அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் குற்றத்திற்கு ஒப்பானது என்பதால் சுகாதார அமைச்சு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கைக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுப்பு வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...