வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக யால குளங்கள் பவுசர் தண்ணீரால் நிரப்பப்படுகின்றன!

Date:

தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை யால தேசிய பூங்காவையும் பாதித்துள்ளதால் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பௌசர்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு சிறிய குளங்களுக்கு பாய்ச்சப்பட்டு வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யால தேசிய பூங்கா ஊடாக பாயும் மெனிக் ஆற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டு பௌசர்கள் மூலம் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு தண்ணீர் தேவைப்படும் இடங்களுக்கு நிரப்பப் படுகிறது.

மேலும் பூங்காவில் உள்ள வறண்டு கிடக்கும் தொட்டிகளுக்கு சோலார் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் பம்ப் செய்யப்படுகிறது.

யால தேசிய பூங்காவிற்கு தற்போது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், எனவே சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளைப் பார்ப்பதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாளாந்த வருமானம் 80 இலட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...