13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க முஸ்லிம் கட்சிகளை அணி திரளுமாறு கோரிக்கை!

Date:

13 ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்துவது தொடர்பில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை கோரியுள்ள நிலையில், இது விட­ய­மாக முஸ்லிம் தரப்­புகள் சமூக விவ­கா­ரங்­களில் ஒரே நிலைப்­பாட்டுடன் ஜனா­தி­ப­தியை சந்­திக்க வேண்டும் என நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பிரதித் தவி­சாளர் பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்மான்  வலி­யு­றுத்­தினார்.

அத்­தோடு, முஸ்லிம் அர­சியல் தரப்­புகள் ஒன்­றி­ணைந்து திட்­ட­மிட்டு செயற்­ப­டு­வதன் மூலம் இனப்­பி­ரச்­சினை தீர்வுப் பொறி­முறை ஊடாக முஸ்லிம் தரப்­புக்கும் நியா­யத்தை பெற்­றுக்­கொ­டுக்க முடியும் எனவும் அப்துர் ரஹ்மான் தெரி­வித்தார்.

அர­சியல் தீர்வு பேச்­சு­வார்த்­தைகள் தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் அங்­கத்­துவம் வகிக்கும் முஸ்லிம் கட்­சி­களின் தலை­மை­க­ளுக்கு அவர் கடி­த­மொன்றை அனுப்பி வைத்­துள்ளார்.

அந்த கடி­தத்தில், 13வது திருத்­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அதி­கார பர­வ­லாக்கல் விடயம் தொடர்பில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ச்­சி­யான முனைப்­பினை காட்டி வரு­கிறார்.

தமிழ் தரப்­பி­ன­ரு­ட­னான பேச்­சு­வார்த்­தைகள், இந்­திய பிர­த­ம­ரு­ட­னான உயர்­மட்ட கலந்­து­ரை­யாடல், சர்வ கட்சி மாநாடு என அவ­ரது முனைப்­புகள் தொடர்ச்­சி­யாக இடம் பெற்­றுள்­ளன.

அர­சியல் தீர்­வு­களை பேசு­கின்ற அதே­வேளை தமது மக்­களின் சம­கால பிரச்­சி­னை­ தொடர்­பிலும் தமிழ் தரப்பு ஜனா­தி­ப­தி­யுடன் மிகத் தெளி­வா­கவும் தொடர்ச்­சி­யா­கவும் பேசி வரு­கின்­றனர். அதன் விளை­வாக காணி விடு­விப்பு, அர­சியல் கைதிகள் சிலரின் விடு­தலை என சில இடைக்­கால தீர்­வு­க­ளையும் அவர்கள் பெற்றுக் கொண்­டுள்­ளனர். இது தொடரில் மற்­று­மொரு வேண்­டு­கோ­ளினை ஜனா­தி­பதி இப்­போது முன் வைத்­துள்ளார்.

13 வது திருத்த அமு­லாக்கம் தொடர்பில் தத்­தமது இறுதி அபிப்­பி­ரா­யங்­களை எழுத்து மூல­மாக வழங்­கு­மாறு அர­சியல் கட்­சி­க­ளிடம் தற்­போது அவர் கோரி­யுள்ளார்.

அர­சியல் தீர்­வினை பொறுத்­த­வ­ரையில் ஒவ்­வொரு தரப்பும் தமது நிலைப்­பா­டு­களை தீர்க்­க­மாக முன் வைத்து வரு­கின்­றனர். அந்த வகையில் நமது மக்கள் சார்­பாக தீர்க்­க­மாக பேசு­வ­தனை இனி மேலும் தாம­தப்­ப­டுத்த முடி­யாது.

அதேவேளை,  ‘இது ஒன்றும் நடக்கப் போவ­தில்லை’ என இந்த முனைப்­பு­களை புறக்­க­ணிக்­கவும் முடி­யாது. ஏனெனில்,  தீர்­வுகள் எட்­டப்­ப­டா­விட்­டாலும் கூட ஒவ்­வொரு அர­சியல் பேச்சு வார்த்­தை­களின் போதும் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற- பேசப்­ப­டு­கின்ற விட­யங்­களே எதிர்­கால தீர்­வு­க­ளுக்­கான அர­சியல் அத்­தி­வா­ரங்­க­ளாக மாறு­கின்­றன.

இந்த அதி முக்­கிய அரசியல் காலகட்டத்தில் நாம் நமது நிலைப்பாடுகளை தீர்க்கமாக மட்டுமன்றி ஒருமித்த குரலிலும் பேச வேண்டி உள்ளது.  இதனை ஒருங்கிணைந்து முன்னெடுப்பது தொடர்பான சில முக்கிய ஆலோசனைகளை உங்களோடு நேரடியாக கலந்துரையாட விரும்புகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...