20 வருடங்களாக அதிகரிக்கப்படாத எம்.பிக்களின் சம்பளங்கள்!

Date:

20 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என  இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, தெரிவித்துள்ளார்.

அதேநேரம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வரியில்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு கோரியுள்ளதாக ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் வரியில்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாகவும், அது பொய்யெனவும் மறுத்துள்ளதாகவும், அவ்வாறான செய்திகளை பரப்புவதற்கு பொறுப்பானவர்களை சிறப்புரிமைக் குழுவின் முன் நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நிலவும் வறட்சி காரணமாக விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கும் போது எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இவ்வாறான கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லாமல் வாகனத்தை இறக்குமதி செய்யும் பாக்கியம் வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றார்.

20 வருடங்களாக எம்.பி.க்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு நிலைமையை சமாளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரியில்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்ய பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து நிதி அமைச்சுக்கு கோரிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...

நாளாந்த சேவையில் காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் !

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து...

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் இலங்கைப் பிரதிநிதியாக மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்....

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் மழை

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...