2024 முதல் தண்ணீர் கட்டண பட்டியல் எஸ்.எம்,எஸ், மின்னஞ்சல் மூலம் வழங்க நடவடிக்கை!

Date:

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை  ஜனவரி 2024 முதல் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் மூலம் மாதாந்த நீர் கட்டண விபரங்களை நுகர்வோருக்கு வழங்கும் என வர்த்தக பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்தி மற்றும் இ-பில் சேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் தங்களை உடனடியாக பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் பொலன்னறுவை, திருகோணமலை, கொழும்பு தெற்கு மற்றும் கண்டி தெற்கு ஆகிய இடங்களில் மாதாந்த நீர் கட்டணங்களை வழங்குவதற்காக இ-பில் மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.

எந்த ஒரு நுகர்வோர் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றினால், அவர்கள் நீர் வழங்கல்   சபை உடன் அதன் ஹாட்லைன் 07 1939 9999 மூலம் SMS அனுப்புவதன் மூலம் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

தண்ணீர் பில் கணக்கு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை மேலே உள்ள ஹொட் லைனுக்கு SMS மூலம் அனுப்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...