40 வீதத்தால் அதிகரித்த காடழிப்புச் சம்பவங்கள்

Date:

இவ்வாண்டில் தற்போது வரையில் 123 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் , இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 வீதம் அதிகம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக வேண்டுமென்றே அல்லது கவனக்குறைவான மனித நடவடிக்கைகளினால் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான காடழிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காடழிப்பு செயற்பாடுகள் மழையைத் தரும் என்ற மூட நம்பிக்கையின் காரணமாக கிராமங்களில் உள்ள சிலர் காடுகளுக்கு தீ வைப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர், பொலிஸார் , தீயணைப்புப் படை மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து காட்டுத் தீயை விரைவாகக் கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...