40 வீதத்தால் அதிகரித்த காடழிப்புச் சம்பவங்கள்

Date:

இவ்வாண்டில் தற்போது வரையில் 123 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் , இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 வீதம் அதிகம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக வேண்டுமென்றே அல்லது கவனக்குறைவான மனித நடவடிக்கைகளினால் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான காடழிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காடழிப்பு செயற்பாடுகள் மழையைத் தரும் என்ற மூட நம்பிக்கையின் காரணமாக கிராமங்களில் உள்ள சிலர் காடுகளுக்கு தீ வைப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர், பொலிஸார் , தீயணைப்புப் படை மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து காட்டுத் தீயை விரைவாகக் கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...